ஞாயிறு, 3 மே, 2009
அஹம்பிரம்மாஸ்மி !
ஒரே நேரத்தில் எல்லாவறிலும் ஒற்றுமையும் வேற்றுமையும் இருக்கின்றன.
கடலிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டுத் தண்ணீரில் க்டலின் தன்மை
இருந்தாலும் கடலிலிருந்து வேறுபட்டு இருக்கிறது தீவுகள் ,தட்பவெப்பம்
நிறம், அளவு, இப்படிப் பற்பல உலகங்க்கள் கடலில் இருக்கின்றன.
அவை அந்த துளியில் இல்லை.
அதுபோல்தான் கடவுளின் பிம்பமாக, அதன் துளியாக நாம் இருபதால்
அவரது சாயல் நமக்கு இருக்கிறதே தவிர, அவராக நாம் இல்லை.
' அஹம்பிரம்மாஸ்மி ' என்பதன் பொருள் ,நாம் கடவுள் என்று அர்த்தமல்ல.
நம்மிடம் க்டவுள் தன்மை இருக்கிறது என்பதுதான் சரியான பொருளாகும்.
அதுபோல ஆண்டவனின் முழுமையான சொரூபத்தை 'பரப்பிரும்மம்'
என்று அழைக்கிறோம். அவருடைய ஒரு சிறிய துளியான நம்மை பிரம்மன்
என்கிறோம்.அதனால்தான் நாம் 'அஹம்பிரம்மாஸ்மி' ஆனால் பரப்பிரும்மம்
இல்லை. ப்ரம்மத்திலிருக்கும் தன்மை பரப்பிரம்மத்திலிருந்து வ்ந்ததுதான்.
இருப்பினும் அதுவும் இதுவும் பல விதத்தில் மாறுபட்டு இருக்கிறது.
இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். ! !
க்டவுள் நாமல்ல ! கடவுளை நினைத்து காரியத்தைச் செய்வோம் !!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக