வெள்ளி, 1 மே, 2009

அஹிம்சை !


ஹிம்சை என்றால் துன்புறுத்தல் .அஹிம்சை என்றால் தொந்தரவு
செய்யாது இருத்தல். பிறருக்குக் கேடு செய்பவன் தனக்கே அது
வரும்போதுதான் உண்மை அவனுக்குப் புரிகிறது. இறைவன்
படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றாகும். உயிர்களுக்கிடையே
உள்ள அடிப்படை ஒற்றுமையை அறியாதவன் மட்டுமே பிற
உயிர்களுக்குத் தீங்கு செய்கிறான். ஒரு கை மற்றொரு கையைத்
தண்டித்தால் அது தனக்கே கேடாய் முடியும். ஒரு ஜீவன்
மற்றொரு ஜீவனை ஹிம்சிக்கும் போது கடசியில் அவன்
தன்னைத்தானே ஹிம்சித்துக் கொண்டவனாகிறான்.
பிற உயிர்களைக் கொல்லாதிருத்தலே அறமாகும். மன்னுயிரைத்
தன்னுயிர் போல் காக்கும் மாண்பு ம்னிதருக்கு வேண்டும்.
இருப்பதைப் பகிர்ந்து தானும் உண்டு பிற உயிர்களையும்
வாழ வைப்பவன் தரணியில் மாபெரும் தர்மவானாகிறான்.
உயிர்களில் உறைவது இறைவன். உன்னுள் இருப்பதும் அவனே.

கருத்துகள் இல்லை: