சனி, 1 ஆகஸ்ட், 2009

தூக்கம் பயிருக்குத் தண்ணீர்!


ஒருவருடைய சுகம், துக்கம், உடல் நலம், பலம், பலவீனம் எல்லாமே
தூக்கப் பழக்க வழக்கங்கள்தான் தீர்மானிக்கின்றன.
மனதுக்கும் உணர்வுகளுக்கும் தொடர்பு அறுந்து போகும்போது தான்
தூக்கம் வருகிறது.நாள் முழுதும் உழைத்து மூளை களைப்படையும்
போது நம் கண்கள் பார்ப்பது மனதில் பதிவதில்லை. நம் காதுகள்
கேட்பது மூளைக்குப் போவதில்லை.
நாள் முழுக்க தன் ஞாபக சக்தியில் சேகரித்த செய்திகளை செரிக்க
மூளைக்கு ஓய்வு தேவை.. தூங்கினால் மட்டுமே அது செரிமானமாகி
தேவையான இடங்களில் சேகரிக்கப்படும். இல்லாவிட்டால் மூளைக்கு
செரிமானக் கோளாறு வந்து அவதியாகிவிடும்.
நேரத்தில் தூங்கி நேரமே எழுதல் நல்லது. சாதாரணமாக எட்டு மணி நேரம்
தூக்கம் தேவை. இது வயதைப் பொறுத்தும் இருக்கிறது. குழந்தைகள் அதிகம்
தூங்குவதும் முதியோர்கள் குறைவாகத் தூங்குவதும் தவிர்க்க இயலாத
ஒன்றாகும். முதியோர் தூக்கம் உடல் நலத்தைப் பொறுத்தும் உள்ளது.
தூங்கி எழுந்தவுடன் எந்தக் கலக்கமும் இன்றி தெளிவாக வழக்கமான
பணிகள் செய்யமுடிந்தால் அந்த நேரமே கூட போதுமான தூக்கமாக இருக்கும்.
இது அவரவர் உடல் மனநிலை பொறுத்து அமைகிறது.
பூமியின் காந்த மண்டலம் உள்ள வடக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால்
உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் எரிச்சலும் குழப்பமும் மிஞ்சும் எனப்படுகிறது.
தற்போதைய வீடுகளின் அமைப்பில் திசைக்கு முக்கியத்துவம் தருவதில்
பிரச்சனைகள் வரலாம். தலையைக் கீழே வைத்தவுடன் எங்கு தூக்கம்
நன்றாக வருகிறதோ அதுவே சிறந்த இடம்.
தூங்கினால் குழப்பம் தீரும். தூங்குவதையே குழப்பமாக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை: