
பழநி முருகனைப் பாடிவருவோம்!
பல் உயிரும் வாழவே வேண்டி நிற்போம்!
அழகன் குமரனையே தேடிவருவோம்!
அடைக்கலப் பொருளாக நாம் இருப்போம்!
கழலின் தண்டையொலி கேட்டுவருவோம்!
கடம்பனை கந்தனைக் கண்டுமகிழ்வோம்!
குழகன் திருவடியே சரணம் செய்வோம்!
குன்றெல்லாம் அவனையே கொண்டாடுவோம் ! !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக