புதன், 29 ஏப்ரல், 2009

அன்பு !

அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவனும் மணியும் ஒளியும் போல்
ஒன்றேயாகும் . அன்பு சிவனின் திருமேனி . எனவே அன்பே சிவமாகும்
இறைவனிடம் அன்பு செலுத்துவோம் . இருக்கும் வாழ்வை இனிமையாக்குவோம் .அன்பால் சாதிக்கமுடியாது அகிலத்தில் ஏதுமில்லை .
புதியவரைக் கண்டால் ஒரு புன்னகை.புரிந்தவர் வந்தால் ஒரு விசாரிப்பு .
நல்ல உள்ளத்தோடு நலம் பாராட்டுங்கள் . நாமும் வாழ்வோம் மற்றவரையும்
வாழ வைப்போம் என்ற எண்ணம் என்றும் மனதில் அடிநாதமாக ஒலிக்கட்டும்
பரிட்சித்து பாருங்கள் உங்களுக்குள் மாற்றம் தெரிவது நிச்சயம் .
மனதில் அன்பு ஊறட்டும் . வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் .

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

கருத்துகள் இல்லை: