வியாழன், 30 ஏப்ரல், 2009

அறம் !

அறம் என்பது தருமம் . அறம் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும் .
அறம் பலவகைப்பட்டது. வாழ்க்கைக்குத் தகுந்த செயல் எது என்று
வரையறுக்கப்பட்டது அறம். அவரவர் நிலைக்கு ஏற்றவாறு அது அமையும்.
பொம்மைகளை வைத்து விளையாடுவது குழ்ந்தைகளின் அறம். முதியோர்க்கு
அது அறமாகாது. பொதுவாக பொறாமை, ஆசை, கோபம், க்டுஞ்ச்சொல்
இவைகளை நீக்கி நாம் செய்கின்ற செயல்கள் அறச்செயலாகும் . அறம்
செய்வதைவிட மேம்பட்ட செயல் இல்லை.
தகாத வழியில் சம்பாதித்து தான் என்ற அகந்தையுடன் தர்மத்துக்கு மாறான
செயல் புரியவா இந்த மனித ஜன்மம் எடுத்தோம்? சரியா தவறா தங்களது
மனதைக் கேட்டுச்செயயுங்கள்.

மாசில்லா மனம் கள்ளம் காட்டாது . மனதோடு உதவுங்கள் மகிழ்வோடு
வாழுங்கள் ! !

கருத்துகள் இல்லை: